சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்…

சென்னை குன்றத்துரை அடுத்த கோவூரில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சர்வதேச தனியார் பள்ளி வளாகத்தில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது…

இந்த சதுரங்க போட்டிகளில் ஸ்ரீ கிரிஷ் தனியார் பள்ளியை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிக்காட்டினர்…

சர்வதேச சதுரங்க தினத்தினையோட்டி நடைபெற்ற இந்த சதுரங்க போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குஅப்பள்ளியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்…

மேலும் இந்நிகழ்வின் போது பள்ளியின் தலைமை செயல் அதிகாரி ஜெய் கார்த்திக், சதுரங்க விளையாட்டு ஆசிரியர், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் போட்டியின் நடுவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Chennai