அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

சென்னை அசோக் நகர் இந்திரா குடியிருப்பில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்..

முன்னதாக சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம்கள் நடைபெற்றது, பின்னர் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி யாத்ராதானம் மேற்கொள்ளப்பட்டது,பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று வேதாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது…

பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது…

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் அசோக் நகர் இந்திரா குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு சர்வ சக்தி விநாயகப் பெருமானின் அருளினை பெற்று சென்றனர்…

பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது…

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் அருள்மிகு சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன்
உள்ளிட்ட ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்,, ஆலயத்தின் செயல் அலுவலர், தொழிலதிபர்கள், ஆலய உபயதாரர்கள், இந்திரா நகர் குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Chennai