காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பத்தாம் ஆண்டு விழாவில், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் காமராஜ் மற்றும் நாமக்கல் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்…

மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பம்மல் வடக்கு பகுதி தி மு க செயலாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு தி மு க மாவட்ட பிரதிநிதி தனசேகரன், ஏ ஜே ஆர் ட்ரான்ஸ்போர்ட் செந்தில்குமார், பி எல் ஆர் ட்ரான்ஸ்போர்ட் லிங்கராஜ் ஓம் முருகா ட்ரான்ஸ்போர்ட் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, மணல் லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்…

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த பத்தாம் ஆண்டு விழாவில்,, கனிமம் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, தென் சென்னை லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் மயிலை செல்வம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்கள், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அகத்தியன்,செயலாளர் செல்வகுமார் பொருளாளர் சீனிவாசன், உள்ளிட்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Chennai