சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டி காஞ்சி மடம் ” பாரதிய கலாச்சார சேவா மணி” என்ற விருதை ஸ்ரீ ஜெகதீஷ் கடவுள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.
தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் என்பது வேத வாக்கியம், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்பார் வள்ளுவர். அந்த வகையில் பாரம்பரியமான ஸ்வர்ண கலைநயமிக்க நகை வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்து, வறியவர்க்கு ஈதல் வேண்டும், அதனால் புகழ் ஈட்டலே சிறப்பு…

