சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின் துவக்க விழா

சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெரு விரிவு பகுதியில் சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது… இதில் ஸ்ரீ கிருஷ்ணா குழும நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தொழிலதிபர் சத்தீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின் முதல் விற்பனையை துவக்கி வைத்து அங்காடியின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்த்து தெரிவித்தார்….

முன்னதாக அங்காடியின் திறப்பு விழாவை முன்னிட்டு அங்காடி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது…

துவக்க விழாவிற்கு பின் சக்தி பல்பொருள் விற்பனை அங்காடி குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சக்தீஸ்வரன் கூறுகையில்,

சக்தி பல்பொருள் விற்பனை அங்காடியின் முதல் கிளையினை துவக்கி வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,இதேபோன்று பல்வேறு கிளைகளை திறந்து மென்மேலும் வளர வாழ்த்துவதாக தெரிவித்தார்,

மேலும் திறப்பு விழா குறித்து விற்பனை அங்காடியின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்,

சக்தி குழுமத்தின் முதல் கிளையினை சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெரு விரிவு பகுதியில் துவங்கியுள்ளதாகவும், இந்த திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த தொழிலதிபர் சத்தீஸ்வரன் அவர்களுக்கு, தங்களின் குடும்பத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும்,புதிதாக துவங்கப்பட்டுள்ள தங்களின் இந்த விற்பனை அங்காடியில் மளிகை,காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமானதாகவும்,குறைவான விலையில் கிடைக்கும் எனவும்,துவக்க விழா சலுகையாக, இம்மாதம் இறுதி வரை,500 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார் …

மேலும் இந்த பல்பொருள் விற்பனை அங்காடியின் துவக்க விழாவில்,அங்காடியின் உரிமையாளர் அவர்களின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் …

Launch