செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது …இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்…முன்னதாக ஆலயத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, பின்னர் மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் எடுத்துச் சென்று கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்ற்றது, பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலயத்திற்க்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது…
இதில் காட்டாங்கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் அருளினை பெற்று சென்றனர்…பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆலய விழா குழுவினர் சார்பாக அருஞ்சுவை உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டது..
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஆலயத்தின் நிர்வாகிகள் மணிமாறன் அருள்,நாதன், தியாகு,பாலு என்கிற சுகுமாரன், கணேசன்,பாக்யராஜ் உள்ளிட்ட ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள்,ஆலய உபயதாரர்கள், அரசியல் பிரமுகர்கள், காட்டாங்கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…